Wednesday, February 3, 2010

கந்தகோட்டை...

சாதாரணமான கற்பனை...சாதாரணமான முயற்சி... கதையை எப்படிச் செய்தால் விறுவிறுப்பு ஏற்படும் என்று முயன்று, ஒரு கருவை வைத்து வழக்கமான மசாலாவுடன் கட்டிய கோட்டை....

அஸ்திவாரம் அவ்வளவு ஸ்திரமாக இல்லை இயக்குனர் நண்பரே. உங்கள் முயற்சி பாராட்டத் தகுந்தது ஆனால் முத்திரை பதிக்கும் அளவு படத்தின் ஆற்றல் இல்லை என்பது என் பார்வை. படம் எடுப்பது சாதாரணமான வேலை இல்லை ஆனால் அந்த வாய்ப்பு இன்னும் நன்றாகப் பயன் படுத்தப் பட்டிருக்கலாம்.

காதலை பிரித்து வைக்கும் கதா நாயகன் , காதலை சேர்த்து வைக்கும் கதா நாயகி இவர்கள் சேரும் வரை ஓடும் கதை... அவர்கள் காதலில் விழும் போது வழக்கமான தமிழ் சினிமாவின் தண்டவாளத்துக்கு மாறுகிறது. ஏய்... என்று கத்தலும் கூச்சலும் உள்ள ஒரு மாமனித வில்லன் (சம்பத் குமார்- அண்ணாச்சியாக), அவரை சுற்றி ஒரு கும்பல், அந்த வில்லன் ஒரு சைகோ என்ற கற்பனை வழு வழு வந்த மரபே...

பொழுது போக்கு என்று ரசிக்கத்தக்க வகையில் காமெடியும் சில காட்சிகளும் இருந்தன என்பது உண்மை. அதே பாணியில் படத்தை கொண்டு போய், சில நல்ல விஷயங்களை சொல்லி மக்களிடம் சென்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். படத்தின் பாணி வேறு தரம் கொண்டதாய் இருந்திருக்கும்.

முடிந்ததை பேசி என்ன பயன் என்று சொல்லலாம் ஆனால் அடுத்த முயற்சிக்கு முன் சிந்திக்கலாமே! சக்திவேல் (இயக்குனர்) மாறுபட்ட கருத்துக்களின் மூலம் மக்கள் மனதை கவர்வது அவசியம். உங்கள் எதிர்காலம் உங்கள் சிந்தனையில் உள்ளது. தொழில்நுட்பக் குழுவின் பங்கு ஓகே. சிறப்பு அம்சங்களாய் மனதில் நிற்கும் அளவு ஒன்றும் இல்லை.

நகுலன் (கதா நாயகன்) மற்றும் பூர்ணிமா (நாயகி) இருவருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு. பூர்ணிமா தொடர்ந்து தன உடல்கட்டை, முக வசீகரத்தை பராமரிக்க வேண்டும். ஒரு சிறப்பு என்னவென்றால் பூர்ணிமா ஒரு கோணத்தில் ஸ்ரேயா போல் தெரிகிறார், சில நேரங்களில் அசின் மிக்ஸ், என்று ஒரு கலவை வசீகரம் உள்ளது.

கோட்டைக்குள் போகிறோம் என்று சென்ற வேகம் இல்லீங்க....கந்தக்கோட்டை ஒரு சின்ன மச்சு வீடுதானே .... ஏமாற்றி விட்டீர்களே!

1 comment:

  1. நானும் இந்த படத்தைப் பார்த்தேன். அவ்வளவாக பிடிக்கவில்லை. அரைத்த மாவு. நீங்கள் குறிப்பிட்டது போல் பூர்ணிமா அழகாக இருக்கிறார்.

    ReplyDelete

Thank you for expressing your great thoughts!