Saturday, April 4, 2009

"தீ" எரிவது போல் தெரியவில்லை...




நிர்வாணமாய் சுந்தர். சி ஆண்டி கோலத்தில் வருவதை எப்படி நியாயப் படுத்தலாம் என்று இயக்குனர் செய்த முயற்சி, அரசியல்வாதியாய் மாற சுந்தர். சி செய்யும் வழக்கமான திடுக் திருப்பம் என்று ஓர் வழக்கமான தமிழ் படம்.

போலீஸ் நாட்டிற்க்கும் மக்களுக்கும் எவ்வளவு தேவை என்பதை சொல்லும் படங்களில் இதுவும் ஒன்று. அரசியல்வாதிகளின் அடாவடித் தனத்தை ஒரு இன்ஸ்பெக்டர் ஆக கதாநாயகன் சுந்தர் சி எப்படி ஒடுக்குகிறார் என்று காட்டும் மசாலாத் தீ அவ்வளவு இதமாக இல்லை.

ஆரம்பத்தில் இருந்தே ஒரு பிடிப்பில்லாமல் போகிறது. திரும்ப திரும்ப வந்த கதை போல் இருப்பதால் இதுதான் நடக்க போகிறது என்று ஓரளவு செய்யும் நம் ஊகம் சரியாக செல்கிறது.

இன்ஸ்பெக்டர் ஆக இருந்தவர் ஒரு கட்டத்தில் அரசியல்வாதிகளால் தாக்கப் பட்ட பின் குடும்பத்தையும் இழக்கிறார். மறுபடி அரசியல் வாதியாய் மாறி பழி வாங்க வரும் சுந்தர் சி சந்தனம் குங்குமம் பூசி கொண்டு அதே முகம் மேக் அப்புடன் வருவது அப்பட்டமான தவறு. அவரை பார்த்தால் அப்படியே தெரிகிறது பழைய இன்ஸ்பெக்டர் என்று. அவரது எதிரிகளுக்கு எப்படி தெரியவில்லை என்று எனக்கு புரிய வில்லை.

மறுபடி மறுபடி கதையை கொண்டு செல்ல இயக்குனர், முயற்சி செய்திருக்கிறார். படம் எடுப்பதற்கு கதை ஒன்று வேண்டும், எந்தக் கதையை சொல்லி எந்த தயாரிப்பாளரை பிடிப்பது என்பதற்கு ஒரு திறமை இருந்தால் போதும் என்ற முறையில் இந்த படம் நாம் ஏற்கனவே பார்த்த இட்லி சாம்பார்.

ஸ்ரீகாந்த் தேவா இசை ரசிக்கும் படி இருந்தது. நடிப்பிற்கு ஒன்றும் பெரிய வாய்ப்புகள் இல்லை. அரசியல் வாதி ராம பாண்டியன் நல்ல முறையில் நடித்திருக்கிறார்.

சுந்தர் சி இன்னும் நடனப் பயிற்சி எடுத்தால் நல்லது. இடுப்பு கொஞ்சம் வளைந்து பாவங்களை கூட்டலாம். புது கதாநாயகி மலேசியா ரம்யா-விருக்கு நல்ல எதிர்காலம் இருக்கலாம், நடிப்பில் இன்னும் கொஞ்சம் ஈடு பாடு இருந்தால்!

வேறு ஒன்றும் பெரிதாக சொல்வதற்க்கில்லை. தீயின் சூடு அவ்வளவாகத் தெரியவில்லை.

No comments:

Post a Comment

Thank you for expressing your great thoughts!