Thursday, April 2, 2009

திரைப்படத்தின் போக்கு...

மனிதர்கள் மாறுகிறார்கள். அதே போல் மனிதனிடம் உருவாகும் ரசனையும் மாறுகிறது. திரைப்படத்தின் வரலாறு அதில் இருந்து விதி விலக்கல்ல. படம் முழுதும் பாடல்கள், மெல்ல ஆறுதலாகப் பேசி கவலையை போக்க நையாண்டி, கதை அம்சம் என்று தொடங்கிய தமிழ் படங்கள் மக்கள் ரசிக்கத்தக்க வகையில் காட்சிகளுடன் சமூக நன்மையையும் மனதில் கொண்டு கதை காட்சிகளை கொண்டிருந்தன. படங்கள் நாளாவட்டத்தில் மாறி தற்போது எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் காட்டலாம் என்று வந்து விட்டன. மனிதன் மாறி உள்ளான். திரைப்படங்களும் மாறி உள்ளன என்று நாம் அப்படியே போனாலும் ஏதோ ஒரு உள்ளுணர்வு நம்மை கேட்க்கும். நமது கலாச்சாரம் எங்கு போனது என்பதுதான் அது. ஆனால் கலாச்சாரத்தை பற்றி யார் கவலைப்பட? மனிதன் மாறி விட்டான். கலாச்சாரம் மாறத்தானே செய்யும். நமது கால கட்டத்தில் உள்ள பெரியவர்களுக்கு நாம் செய்வது சரியல்ல என்று தோன்றும். நமது சந்ததி செய்வது நமக்கு கசக்கும். இதற்க்கு முடிவுண்டா? நமது கலா ரசனையும் வெளிப்பாடும் நாளைய சமுதாயத்தில் நல்லவை நடக்க வழி கோலுமேயயாயின் அதுவே சிறந்த வெளிப்பாடு. உணர்வு. ஆனால் இன்றைய சமுதாயம் வியாபார எண்ணத்தில் மக்கள் உணர்வுகளின் ஸ்திரம் இல்லா தன்மையை சாதகமாக்கி கலை என்ற பெயரில் திரைப்படங்களில் புகுத்துவது சரியா என்று தோன்றவில்லை. எது கலை? எது நமக்கு தேவை? சராசரி மனிதனால் இதற்க்கு பதில் சொல்ல தெரியாது. அதில் அவனுக்கு ஆர்வமும் கிடையாது. கலைஞர்கள் அல்லது சிந்தனைவாதிகள் சொல்வார்களா?

முகில்

No comments:

Post a Comment

Thank you for expressing your great thoughts!