
குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்....ஒரு சாதாரண படமாக இருக்குமென்று இப்படத்தை பார்க்கத்துவங்கினேன்...கதை களம் ஒரு அழகான கடற்கரை சிற்றூர் முட்டம். அங்கே புதிதாக வரும் துளசிக்கும், அதே ஊரில் வசிக்கும் (நம்ம)கூச்சான் இவர்களிடையே வரும் நட்பு, காதலென தொடர்கிறது கதை.படத்தின் தொடக்கத்திலேயே ஏதோ ஒரு சோகம் நிகழ்ந்த அறிகுறிகள், வேண்டியவர்களுக்கு, சொல்லி அனுப்பியாகிவிட்டது, அவர்களுக்கு காத்திருக்கும் வேளையில்,நடந்தவற்றை நினைக்கிறான் ஒருவன்.வழக்கமான இளங்காதலர் இடையே வரும் நட்பு,கோபம்,விளையாட்டு என படம் அமைந்திருந்தாலும் அதை வித்தியாசமாக, ஏற்றுக்கொள்ளக்கூடிய விதமாக,நம்மைக்கவரக்கூடிய விதமாக,சிறு தொய்வும் இல்லாமல்,விரசம் இல்லாமல்,மிக எதார்த்தமாக பாமர மக்கள் மட்டுமன்றிDowntown மக்களும் ரசிக்கக்கூடிய விதத்தில் மிகச்சிறப்பாக இப்படத்தை எடுத்துள்ள டைரக்டர் ராஜ் மோகனுக்கு ஒரு சபாஷ்! பாரதி ராஜாவைவிட ஒரு படி மிஞ்சிவிட்டார் எனவும் சொலலாம்.அறிமுக நடிகர்கள் என்று தெரியாத அளவுக்கு நடிப்பும், இளவயதிற்கு ஏற்ற அறியாமையும், பின்னே முதிர்ச்சியையும் காட்டியுள்ள மிக இயல்பான நடிப்புக்கு பல ஓ.. போடலாம்! போடுங்களேன்!இப்படத்தின் இன்னொரு சிறப்பு முன்னணி நடிகர்கள் யாரும் இல்லாதிருப்பது. மிகை நடிப்பு சற்றும் இல்லாமல் அழுத்தமான கதையுடன் கூடியபடம். 16 வயதினிலே படத்திற்குப்பிறகு வந்திருக்கும் அருமையான படம்.துளசி-ஆர்ப்பாட்டம் இல்லாத மயக்கும் அழகுமுட்டத்து பக்கத்துல பாடல்... சூப்பர்.டைரக்டருக்கு என் நன்றி: படத்துல உண்மைத்தமிழர்களை நடிக்க வைத்தது.பி:கு= ரசணை என்பது ஆளாளுக்கு வேறுபடும். இங்கே எனது ரசணையை பிரதிபலித்திருக்கிறேன். நன்றி
No comments:
Post a Comment
Thank you for expressing your great thoughts!