
தேவா என்ற பாத்திரத்தில் இயங்கும் சூர்யா ஒரு கடத்தல் மன்னன். சுங்க இலாகா அதிகாரிகள், எதிரிகள், மற்ற கடத்தல் கூட்ட அடியாட்கள் கண்களில் மண்ணை தூவி விட்டு கடத்தல் தொழிலில் ஒரு சூப்பர் ஏஜென்டாக பிரபுவிடம் வேலை செய்கிறார். ஒரு கம்ப்யூட்டர் பட்டதாரியான அவர், இப்படி ஒரு கடத்தல் தொழில் செய்வது மக்களுக்கு அதுவும் இளைஞர்களுக்கு கெட்ட எண்ணங்களை விதைக்கும் வித்து போல் இருக்கிறது. இயக்குனர் கே.வி.ஆனந்த் இந்த ஒரு விஷயத்தை மாற்றி இருந்திருக்கலாம். நல்ல எண்ணமுள்ள தேவாவாக வரும் சூர்யா செய்யும் தொழில் தெரிந்தும் அவரைக் காதலிக்கிறரா தமன்னா என்று கேட்க்க தோன்றினாலும் அதை பட்டும் படாமலும் கொண்டு சென்று விட்டார் இயக்குனர்.
வழக்கமான மசாலா கதையை தொழில் நுட்ப மேம்பாட்டுடன் பவ்யமாக செய்யக் கூடிய வித்தைகள் தமிழ்ப் படங்களில் வந்து ஜாலம் காட்டிக் கொண்டிருக்கும் புதிய தமிழ்ப் படங்களில் அயன் இன்னோன்றே தவிர, சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் எதுவும் கதா பாத்திரங்கள் மூலமாகவோ, கதையின் மூலமாகவோ சொல்லப் படவில்லை, சொல்லவும் முடியாது. படத்தின் கருத்தே அப்படி என்றால் இதில் சிறப்பாக சொல்ல என்ன இருக்கிறது?
ஹீரோயிசம் என்ற பழைய படங்களின் நல்ல கதா நாயகர்கள் காணமல் போய் தற்கால கதா நாயகர்கள் திருடர்களாய், கடத்தல் காரர்களாய், கொலை காரர்களாய் தொடர்ந்து வந்தாலும், பொழுது போக்கு என்று எண்ணப்படும், சொல்லப்படும் விஷயங்கள் கொஞ்சம் விஷத்தையும் சில உள்ளங்களில் கலந்தால் ஆச்சர்யப்படுவதற்க்கில்லை.
திரைப்படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் சிரத்தையுடன் நல்ல முயற்சி செய்திருக்கின்றனர். M.S. பிரபுவின் ஒளிப்பதிவு ஏற்கனவே நல்ல ஒளிப்பதிவாலராய் இருந்த கே.வி. ஆனந்துடன் சேர்ந்து நல் வடிவு தருகிறது. கலை இயக்கம், சண்டைக் காட்சிகள் இயக்கம், நடனம் என்ற புது முயற்சிகள் நன்குள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை மிகவும் ரசிக்கும் படியில் இருக்கிறது. பாடல்கள் ஏற்கனவே எல்லோர் வாயிலும் முனுமுனுக்கப்பட்டு டாப் 10-ல் உள்ளது.
அயன் என்ற பெயர்காரணம் பற்றி யாரவது சொன்னால் நன்றாக இருக்கும். ஆங்கிலத்தில் ion என்று சொல்வது ஒரு அணுசக்தியின் சேர்க்கை ரூபம் என்று பொருள் கொள்ளலாம். அதுதான் இயக்குனரும் சொல்ல வருகிறாரா என்று யூகிக்கிறேன். மொத்தத்தில் அயன் 6/10 மார்க் பெறுகிறது.