
ரசிகர்களே நல்ல நடுவர்கள். தீர்ப்புகள் அவர்களால்தான் நிச்சயிக்கப் படுகின்றன. படம் எப்படி ரசிக்கப்பட்டது என்பதை வைத்து படைப்பாளிகள் பாராட்டு பெறுகிறார்கள். இங்கு உங்கள் தீர்க்கமான கருத்துக்களை வரவேற்கிறேன். திரைப்படக் கலையின் ஆக்கதாரிகளின் படைப்புத்திறன் பற்றிய மேன்மையான் கருத்துக்களை நீங்கள் பரிமாற வேண்டும். உங்கள் கருத்துக்கள் அவர்களின் படைப்பாற்றலை மெருகு படுத்தும் சாணைக்கல்! உங்கள் வருகைக்கு நன்றி....முகில்
காதலின் புணிதமான தேடலாய் இந்த இளம் காதல் வரும் போதெல்லாம் வயதானவர்களை கூட தம் வாழ்வின் பழைய நாட்களுக்கு சென்று தாம் செய்த முதற் காதலின் புணிதத்தை உணரும் அளவிற்கு ஒரு வெளிப்பாடு இந்த காதலின் மூலம் வருகிறது .
பழனியில் வாழும் மாரி, மதுரை சென்றும் தன் காதலியை காணாமல் கபடியில் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து கொள்வது சோகமான விஷயம். இது உண்மையில் நடந்ததா சுசீந்திரன் அவர்களே? இல்லை just கற்பனையா?
கபடிதான் கதை என்றாலும், கபடி ஆடும் அந்த ஊர் வாலிபர்கள் மத்தியில் உள்ள சமூக சாயங்கள், எப்படியாவது செயிச்சு போடனுமுடே என்ற வேகம், தோற்றுக்கொண்டே வரும் அவர்களை ஏசும் கிராமம், மக்கள் மத்தியில் உள்ள மூட நம்பிக்கைகள், சாதி உணர்வின் குழப்பங்கள் என்று பல விஷயங்களையும் கதா பாத்திரங்கள் செல்லும் இயல்பு வாழ்க்கை மூலமாக சொல்கிறது வெண்ணிலா கபடி குழு.
இந்த மாதிரிப் படங்கள் தமிழ் பட முத்திரைகள் என்று சொல்லலாம். தமிழ் படங்களுக்கே உரித்தான பாடல், சண்டை இருந்தாலும், கதையோடு ஒட்டி போய் சொல்லும் போது ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம்.
சொல்லப்படும் கருத்து, கதையின் அமைப்பு, இந்த team work என்ற மந்திரம், தாம் சொல்ல வந்ததை அழகாக சொல்லும் பாங்கு என்று வெண்ணிலா கபடி குழு நன்றாக மனதுடன் விளையாடுகிறது.
செல்வ கணேஷ்-ன் இசை கதையுடன் இசைப்பது நன்று. கலை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் செவ்வனே பணியாற்றியுள்ளனர். வழக்கமான SFX filter முயற்சிகளை குறைத்து, காண்பதை நன்றாக படமாக முயற்சி செய்தது நன்று.
சுசீந்திரன் ஒரு நல்ல திரைப்படத்தின் மூலம் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவரின் திரைப்பயணம் நல்ல முறையில் அமைய வாழ்த்துவதுடன், தன் பயணத்தின் மைல் கற்களாய் நல்ல கருத்துள்ள திரைப்படங்களையே அவர் கொண்டு வர வேண்டும் என்று வேண்டுவதுடன் அன்பு ஆணையும் இடுகிறோம்....
வெண்ணிலா கபடி குழுவுக்கு கிடைத்த வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
முகில்
மனிதர்கள் மாறுகிறார்கள். அதே போல் மனிதனிடம் உருவாகும் ரசனையும் மாறுகிறது. திரைப்படத்தின் வரலாறு அதில் இருந்து விதி விலக்கல்ல. படம் முழுதும் பாடல்கள், மெல்ல ஆறுதலாகப் பேசி கவலையை போக்க நையாண்டி, கதை அம்சம் என்று தொடங்கிய தமிழ் படங்கள் மக்கள் ரசிக்கத்தக்க வகையில் காட்சிகளுடன் சமூக நன்மையையும் மனதில் கொண்டு கதை காட்சிகளை கொண்டிருந்தன. படங்கள் நாளாவட்டத்தில் மாறி தற்போது எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் காட்டலாம் என்று வந்து விட்டன. மனிதன் மாறி உள்ளான். திரைப்படங்களும் மாறி உள்ளன என்று நாம் அப்படியே போனாலும் ஏதோ ஒரு உள்ளுணர்வு நம்மை கேட்க்கும். நமது கலாச்சாரம் எங்கு போனது என்பதுதான் அது. ஆனால் கலாச்சாரத்தை பற்றி யார் கவலைப்பட? மனிதன் மாறி விட்டான். கலாச்சாரம் மாறத்தானே செய்யும். நமது கால கட்டத்தில் உள்ள பெரியவர்களுக்கு நாம் செய்வது சரியல்ல என்று தோன்றும். நமது சந்ததி செய்வது நமக்கு கசக்கும். இதற்க்கு முடிவுண்டா? நமது கலா ரசனையும் வெளிப்பாடும் நாளைய சமுதாயத்தில் நல்லவை நடக்க வழி கோலுமேயயாயின் அதுவே சிறந்த வெளிப்பாடு. உணர்வு. ஆனால் இன்றைய சமுதாயம் வியாபார எண்ணத்தில் மக்கள் உணர்வுகளின் ஸ்திரம் இல்லா தன்மையை சாதகமாக்கி கலை என்ற பெயரில் திரைப்படங்களில் புகுத்துவது சரியா என்று தோன்றவில்லை. எது கலை? எது நமக்கு தேவை? சராசரி மனிதனால் இதற்க்கு பதில் சொல்ல தெரியாது. அதில் அவனுக்கு ஆர்வமும் கிடையாது. கலைஞர்கள் அல்லது சிந்தனைவாதிகள் சொல்வார்களா?
முகில்