tag:blogger.com,1999:blog-6795831769841907029.post5015946200693571425..comments2023-08-03T03:24:04.907-07:00Comments on Tamil Film Critic: தமிழ்ச் சினிமாவின் புதிய பரிமாணங்கள்...Muhilhttp://www.blogger.com/profile/09363948215380866218noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6795831769841907029.post-16685453191208652372010-02-02T18:04:24.192-08:002010-02-02T18:04:24.192-08:00நல்ல கருத்தோட்டம்! நம் வாழ்வு தொன்றுதொட்டு சிறப்பு...நல்ல கருத்தோட்டம்! நம் வாழ்வு தொன்றுதொட்டு சிறப்பு பெற்றவர்களையே பேசியும் வாழ்த்தியும் வந்துள்ளது. பழங்காலத்தில் நாடளவில் அரசர்கள், ஊரளவில் திறமைசாலிகள், பணம் படைத்தவர்கள் என்று மக்கள் அவர்களைப் பற்றிப் பேசி புகழ் பாடியுள்ளனர். அதே பாணியை இலக்கியம், நாடகங்கள், பின் சினிமா தொடர்ந்தது. மக்களின் ஆழ்மட்ட உணர்வுகளை சினிமா தாக்கியது போல் வேறு எந்தக் கலையும் தாக்கவில்லை. சினிமா பலப்பல கலைகளின் சங்கமமாய் பெரும் பாதிப்பை பண்மடங்கு மக்களின் மனதில் ஏற்படுத்தியது. நான் சொல்ல வருவது என்னவென்றால் சினிமாவின் மூலமாக பழங்கஞ்சியை சூடாக்கி மறுபடியும் மறுபடியும் சாப்பிட்ட நாம், சினிமாவின் சக்தியை வாழ்வியல்போடு, ஒரு அக்கறையோடு, சமூகப்பிரக்ஞையோடு, கலை நுணுக்கப் பரிசோதனைக் கூடமாக மாற்ற முயல்வதை பாராட்ட வேண்டும். ஆங்கிலப் படங்களும் ஹீரோயிஸப் படங்களே. அங்கே கையாளப்படும் தயாரிப்பு யுக்திகளில், ஒரு மலைப்பு ஏற்பட்டு, அது தொழில் நுட்ப மற்றும் அணுகுமுறை, வெளிப்பாட்டு திறன் போன்றவற்றால் ஒரு தரமிக்க உற்பத்தியைத் தருகிறதே தவிர எல்லா ஆங்கிலப் படங்களும் சிறப்பானவை இல்லை. அவர்கள் எப்போதிருந்தோ வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டவர்கள். நாம் இப்போதுதான் சுவாசிக்கத் தொடங்கியுள்ளோம். ஒரு ஆங்கிலப் படம் போல் எடுக்க வேண்டும் என்று சொல்வது நம் இயல்பு. நமது திறன், தனித்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். <br /><br />அன்புடன் முகில்..Muhilhttps://www.blogger.com/profile/09363948215380866218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6795831769841907029.post-44899165780871440312010-02-02T12:29:16.083-08:002010-02-02T12:29:16.083-08:00நல்ல சிந்தனை. என்னைப் பொறுத்தவரை எப்பொழுது நாவல்கள...நல்ல சிந்தனை. என்னைப் பொறுத்தவரை எப்பொழுது நாவல்கள்,கதைகள் திரைப் படமாக உருவாகிறதோ,அதை எப்பொழுது மக்கள் ரசிக்க துவங்குகிறார்களோ அப்பொழுது தான் இந்த ஹீரோயிசம் ஒழியும்.தரமான படங்கள் வரும்.நல்ல இயக்குனர்கள் உருவாவார்கள். அகத்தியன்(காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை) என்ற ஒரு அற்புதமான இயக்குனர்,தங்கர்பச்சான்(அழகி,9 ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம் - நாவலில் இருந்து உருவாக்கியது) என்ற இயக்குனர் இது போன்ற சோதனையில் இறங்கி தோற்றுவிட்டார்கள். ஹாலிவுட்டில் எல்லாம் இந்த கதையைத் தான் படமாக்குகிறோம் என்று சொல்லி எடுக்கிறார்கள். இங்கு மட்டும் எப்படி வெற்றி பெறுகிறது? ஷங்கர் இப்பொழுது சுஜாதா எழுதிய தொடராக வந்த கதையை படம் எடுக்கிறார். இதிலிருந்தாவது அது தொடரட்டும். நன்றி.M.S.R. கோபிநாத்https://www.blogger.com/profile/10659364691414916727noreply@blogger.com